விம்பிள்டன்: ரோஜர் பெடரர் தன் இணை போட்டியாளரான ரபேல் நடாலை பற்றி சமீபத்தில் கூறுகையில், “நாங்கள் டென்னிஸின் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ” என குறிப்பிட்டார். தற்போது இருவரும், விம்பிள்டன் ஓபன் தொடரில் பங்கேற்க உள்ள நிலையில், பெடரர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டென்னிஸ் உலகில், பெடரருக்கு இணையான போட்டியாளர் என்றால் அது நடால் மட்டுமே. இருவருக்கும் களத்தில் நடக்கும் போட்டி ஒரு யுத்தம் போன்றது. பட்டங்களை கைப்பற்றுவதிலும் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த யுத்தம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இதே விம்பிள்டன் தொடரில் தான் தொடங்கியது.
