For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்-காக கைக்கூடி வரும் நற்சூழல்கள்... வாகனின் அந்த யோசனைக்கு வரவேற்பு... முடிவெடுக்குமா பிசிசிஐ!

ஐபிஎல் தொடருக்காக மைக்கேல் வாகன் கூறிய சூப்பர் யோசனைக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பேச்சுக்கள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அந்த நொடியில் எனக்கிருந்த கவலை.. மேன் vs வைல்ட் போல.. கொரோனா குறித்து சுவாரயஸ்யமாக கூறிய எல்.பாலாஜி!அந்த நொடியில் எனக்கிருந்த கவலை.. மேன் vs வைல்ட் போல.. கொரோனா குறித்து சுவாரயஸ்யமாக கூறிய எல்.பாலாஜி!

இந்நிலையில் ஐபிஎல் தொடரை இங்கிலாந்திலும் நடத்துவதற்கான பேச்சுவார்த்தையில் பிசிசிஐ களமிறங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட்

இங்கிலாந்து டெஸ்ட்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் ஆக.4ம் தேதி முதல் செப்.14 வரை நடைபெறுகிறது. ஆனால் அங்கு செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ-க்கு யோசனைகள் உள்ளது. இதனால் கடைசி டெஸ்ட் போட்டியை மட்டும் செப்டம்பரில் இருந்து ஜூலை கடைசி வாரத்திற்கு மாற்ற பிசிசிஐ கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இங்கிலாந்துக்கு சிக்கல்

இங்கிலாந்துக்கு சிக்கல்

ஆனால் பிசிசிஐ-ன் கோரிக்கையை ஏற்பதில் இங்கிலாந்துக்கு சிக்கல் உள்ளது. ஏனென்றால் இங்கிலாந்து நாட்டின் உள்நாட்டு தொடரான 'தி ஹண்ட்ரெட்' ஜூலை 21ம் முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தால் இங்கிலாந்து வீரர்கள் அந்த உள்நாட்டு தொடரில் பங்கேற்க முடியாமல் போகும் சிக்கல் உள்ளது. இதன் காரணமாகவே பிசிசிஐ-ன் கோரிக்கையை இங்கிலாந்து வாரியம் ஏற்க மறுத்துவிட்டது.

மைக்கேல் வாகனின் யோசனை

மைக்கேல் வாகனின் யோசனை

இதற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இதற்கு ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். அவர், இந்தியா - இங்கிலாந்து இடையேயான தொடரை ஒரு வாரம் முன்கூட்டியே ஜூலை கடைசி வாரத்தில் தொடங்க வேண்டும். அப்படி தொடங்கினால் இங்கிலாந்து வீரர்களால் ஜூலை 21ம் தேதி தொடங்கும் 'ஹண்ட்ரெட்' தொடரில் பங்கேற்க முடியாது. அதனால் அவர்களுக்கு பதிலாக டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெறாத இந்திய வீரர்களை 'ஹண்ட்ரெட் தொடரில் ஆட அனுமதிக்க வேண்டும். அப்படி பிசிசிஐ அனுமதித்துவிட்டால், பின்னர் செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல்-ஐ முடித்துவிடலாம்

ஆகாஷ் சோப்ரா வரவேற்பு

ஆகாஷ் சோப்ரா வரவேற்பு

இந்நிலையில் மைக்கேல் வாகனின் யோசனைக்கு ஆகாஷ் சோப்ரா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எங்களின் கோரிக்கையை இங்கிலாந்து ஏற்றால், அவர்களின் கோரிக்கைக்கு நாங்கள் மதிப்பு கொடுப்போம். நீங்கள் டெஸ்ட் தொடரை ஒரு வாரம் முன்னதாக தொடங்கினால், நாங்கள் இந்திய வீரர்களை ஹண்ட்ரெட் தொடருக்கு அனுப்புகிறோம். ஒரு 4 - 5 வீரர்கள் இந்தியா வசம் உள்ளனர். இதுவரை எந்த வீரரையும் அயல்நாட்டு தொடரில் பங்கேற்க பிசிசிஐ அனுமதித்ததில்லை. ஆனால் இந்த தொடருக்காக மட்டும் விதிவிலக்கு செய்கிறோம் என கூறியுள்ளார்.

Story first published: Saturday, May 22, 2021, 20:35 [IST]
Other articles published on May 22, 2021
English summary
Aakash Chopra likes Michael Vaughan’s Idea about IPL 2021 restart
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X