
சிறப்பு
இதில் பிசிசிஐ இறுதியாக 292 வீரர்களை ஏலத்திற்கு தேர்வு செய்தது. இதில் 164 உள்நாட்டு, 125 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அர்ஜுன் டெண்டுல்கர் போன்ற இளம் வீரர்களின் பெயர் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பல நாட்களாக கிரிக்கெட் ஆடாத மோர்னி மோர்கல் போன்ற வீரர்களின் பெயர்களும் கூட இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

சேர்ப்பு
ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் பெயர் இடம்பெற்றது பெரிய அளவில் சர்ச்சையானது. இவருக்கு திறமையே இல்லை. முதல்தர போட்டிகளில் பெரிய அளவில் ஆடவில்லை. இவர் பவுலர்தான். ஆனாலும் அதில் பெரிதாக சாதிக்கவில்லை என்று இவருக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

சாதனை
இந்த நிலையில் தன்னை சிறந்த ஆல் ரவுண்டர் என்று அர்ஜுன் டெண்டுல்கர் நிரூபித்துள்ளார். அதன்படி தற்போது நடந்து வரும் கிளப் போட்டிகளால் போலீஸ் ஷீல்ட் கிரிக்கெட் தொடரில் அசத்தி உள்ளார். மிக் கிரிக்கெட் கிளப் சார்பாக ஆடிய வெறும் 26 பந்தில் 77 ரன்கள் எடுத்தார்.

எத்தனை
இதில் 8 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்தார். இன்னொரு பக்கம் பவுலிங்கிலும் 40 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். இவரின் ஆட்டத்தால் இஸ்லாம் ஜிம்கானா அணி மோசமாக சுருண்டது. இதில் முதலில் ஆடிய மிக் அணி 385 ரன்கள் எடுத்தது. இதன்பின் ஆடிய இஸ்லாம் ஜிம்கானா அணி 191 ரன்கள் எடுத்தது.

ஆட்டம்
இவரின் ஆட்டத்தை பார்த்து ஐபிஎல் அணிகள் சந்தோஷத்தில் இருக்கிறது. முக்கியமாக மும்பை அணி இவரை பார்த்து சந்தோஷத்தில் இருக்கிறது. மும்பை அணிதான் இவரை குறி வைக்கும் எண்ணத்தில் உள்ளது.

சிறப்பு
இப்படிப்பட்ட நிலையில்தான் அர்ஜுன் சிறப்பாக ஆடி வருகிறார். அதிலும் ஆல் ரவுண்டர் என்று நிரூபித்துள்ளார். இதனால் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இவரை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications