லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முக்கிய ஆட்டத்தில் லக்னோ அணியிடம் மும்பை அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் லக்னோ அணி 15 புள்ளிகள் பெற்றுள்ளது. எனினும் சென்னை அணியின் ரன் ரேட் அதிகமாக இருப்பதால் சிஎஸ்கே 2வது இடத்தில் நீடிக்கிறது.
இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஸ்டோனிஸ்க்கு பக்கபலமாக கேப்டன் குர்னல் பாண்டியா நின்று 42 பந்துகளை எதிர்கொண்டு 49 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் ஆடுகளம் தோய்வாக இருந்ததால் குர்னல் பாண்டியாவால் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்க்க முடியவில்லை.

ஆனால், கடந்த ஆண்டு அஸ்வின் விளையாடிய பாது, அதிரடியாக விளையாட முடியவில்லை என்று கூறி விட்டு வெளியேறினார். இதற்கு நடுவர் ரிட்டயர் அவுட் என்று வழங்கி இருந்தார். இதனை குறிப்பிடும் வகையில், ரிட்டயர்ட் அவுட் இல்லையா என்று கேள்வி கேட்டு இருந்தார்.
