For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி இல்ல.. ரோஹித் இல்ல.. தோனி கேப்டன்ஷிப்பில் ஆடணும் - ஆக்ரோஷ பவுலரின் கனவு

மும்பை: தோனி கேப்டன்ஷிப்பில் விளையாட வெளிநாட்டு வீரர்களே அவ்வளவு ஆர்வம் காட்டும் போது, நம்மூர் வீரர்களுக்கு அந்த எண்ணம் இருக்காதா என்ன?

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் மக்களை பாடுபடுத்தி வருகிறது. இன்னமும் தினசரி பாதிப்பு லட்சக்கணக்கில் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.

குறிப்பாக, ஏப்ரல் மாதம் இறுதியில் படுக்கை கிடைக்காமல், ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்கள் ஏராளம். இவ்வளவு ஏன்.. இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கு கூட இடம் கிடைக்கவில்லை.

 மறு தேதி சொல்லாமல்

மறு தேதி சொல்லாமல்

இந்த இக்கட்டான சூழலில் தான் ஐபிஎல் 2021 தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பயோ - பபுள் பாதுகாப்பையும் மீறி கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள், சன்ரைசர்ஸ் வீரர், மேலும் சில கொல்கத்தா அணி வீரர்கள் என்று வைரஸ் போட்டுத் தாக்க, 31 ஆட்டங்கள் மீதமிருக்கையில் ஐபிஎல் தொடரை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது பிசிசிஐ.

 இங்கிலாந்து பயணம்

இங்கிலாந்து பயணம்

இப்போது வரை, மீண்டும் தொடரை எப்போது நடத்துவது? எங்கு நடத்துவது? என்ற எந்த அப்டேட்டும் இல்லை. ரசிகர்கள் ஆவலாக இருந்தாலும், நிலைமை அதற்கு ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது.

 தோனி விக்கெட்

தோனி விக்கெட்

இதற்கான இந்திய அணியில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள். இந்த நான்கு மாற்று வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானும் ஒருவர். ஐபிஎல்-ல் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆவேஷ், நடப்பு தொடரில், சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில், கேப்டன் தோனியை 2வது பந்திலேயே டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார் .

 தோனி தலைமையில்

தோனி தலைமையில்

தற்போது, இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு உற்சாகமாக தயாராகி வரும் ஆவேஷ் கான், இந்தியா டிவி தளத்துக்கு அளித்த பேட்டியில், "எதிர்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். தோனி தலைமையில் விளையாடுவது என்பது எனது கனவுகளில் ஒன்று" என்று கூறியுள்ளார்.

 இரண்டாவது இடம்

இரண்டாவது இடம்

கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரிலேயே, தோனியின் விக்கெட்டை இவர் கைப்பற்றியிருக்க வேண்டியது. அப்போது காலின் மன்ரோ கேட்சை கோட்டை விட்டதால் ஏமாற்றமடைந்த ஆவேஷ், மூன்று வருடம் கழித்து இந்த சீசனில், தனது ஆசையை தீர்த்துக் கொண்டார். ஆனால், அவரது கனவோ தோனியின் கேப்டன்ஷிப்பில் விளையாட வேண்டும் என்பதே. நடப்பு ஐபிஎல் தொடரில், Purple cap ரேஸில் இரண்டாவது இடத்தில் ஆவேஷ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 21, 2021, 11:55 [IST]
Other articles published on May 21, 2021
English summary
avesh khan dream play under dhoni in ipl - ஐபிஎல் 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+