Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூப்பர் அப்டேட்.. இங்கிலாந்தில் ஐபிஎல் தொடர்? டெஸ்ட் தொடரை மாற்றி அமைக்க திட்டம்.. பிசிசிஐ ட்விஸ்ட்!

மும்பை: ஐபிஎல்-காக இங்கிலாந்து டெஸ்ட் தொடரை மாற்றி அமைப்பது குறித்து பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இங்கிலாந்து சம்மதிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்தாவிட்டால் ரூ.2500 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என பிசிசிஐ கணித்துள்ளது. இதனால் தொடரை நடத்தி முடித்தே ஆகவேண்டும் என திட்டமிட்டு வருகிறது.

இதனிடையே அதற்குள் இந்திய அணி 3 மாதங்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறது.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து புறப்படும் இந்திய அணி அங்கு வரும் ஜூன் 18ம் தேதி முதல் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. அதன்பிறகு ஆக.4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இங்கிலாந்தில் பேச்சுவார்த்தை

இங்கிலாந்தில் பேச்சுவார்த்தை

ஐபிஎல் தொடரானது டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக செப்டம்பர் மாதத்தில் நடத்துவதே பிசிசிஐக்கு உள்ள ஒரே வாய்ப்பு. ஆனால் செப்டம்பர் மாதம் 14ம் தேதி வரை இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்திலேயே மீதமுள்ள ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இங்கிலாந்து டெஸ்ட் தொடரையும் மாற்றி அமைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

டெஸ்ட் தொடர் ரத்து?

டெஸ்ட் தொடர் ரத்து?

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் செப்டம்பர் 14ம் தேதியன்று தான் முடிகிறது. இதற்கும் டி20 உலகக்கோப்பைக்கும் உள்ள கால இடைவெளி வெறும் 2 வாரங்கள் தான். ஆனால் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த 2 வாரங்கள் போதாது. இதன் காரணமாகவே இங்கிலாந்து தொடரை மாற்றி அமைக்க பிசிசிஐ பேசி வருகிறது.

நிர்பந்தத்தில் இங்கிலாந்து

நிர்பந்தத்தில் இங்கிலாந்து

பிசிசிஐ-ன் கோரிக்கையை ஏற்க வேண்டிய சூழலில்தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உள்ளது. ஏனென்றால் கொரோனா காரணமாக அந்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க வேண்டும் என்றால் ஐபிஎல் போன்ற மிகப்பெரும் தொடர்களை இங்கிலாந்தில் நடத்துவது சிறந்த முடிவு. இதன் காரணமாக தான் ஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 19, 2021, 22:24 [IST]
Other articles published on May 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+