
காரணம் என்ன?
அதற்கு காரணம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின், அக்சர் பட்டேல் , குல்தீப் யாதவ் ஜோடி சிறப்பாக பந்து வீசி அசத்தியது. குறிப்பாக முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார். டெஸ்ட், டி20, ஒருநாள் என தமக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் அக்சர் பட்டேல் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஜடேஜா ஐந்து மாதத்திற்கு பிறகு அணிக்கு திரும்புவது மூலம் அவருடைய பார்ம் எவ்வாறு இருக்கும் என்று யாருக்குமே தெரியாது.

பிசிசிஐ உத்தரவு
இதனால் பிசிசிஐ ஜடேஜாவை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதன் காரணமாக தற்போது ஜடேஜாவுக்கு தேர்வு குழு உறுப்பினர்கள் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதாவது முழு உடல் தகுதியை எட்டிய பிறகு ரஞ்சி கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. இதில் ஜடேஜா எவ்வாறு செயல்படுகிறார். அவருடைய பழைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு எடுபடுகிறதா என்பதை பொறுத்தே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜடேஜா இடம் பெறுவார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வுக்குழுவின் விரக்தி
இதனை ஜடேஜா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஜடேஜா இந்திய அணியின் சேர்க்கப்பட்ட போது அவர் போட்டியில் பங்கேற்காமல் மனைவிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது பிசிசிஐ உள்ள தேர்வு குழுவினரை அதிருப்தி அடைய செய்தது. தற்போது ஜடேஜா முழு உடல் தகுதியை எட்டிய நிலையில் அவர் அணிக்கு திரும்பும் பாதை கடினம் ஆக்கப்பட்டுள்ளது. எனினும் பிசிசிஐ தற்போது எடுத்த முடிவு போற்றுதலுக்குறியது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

பயிற்சி முகாம்
ஜடேஜாவுக்கு மேட்ச் பிராக்டிஸ் இல்லாத நிலையில் அவர் ரஞ்சிப் போட்டியில் விளையாடி தனது திறமையை உடல் தகுதியும் நிரூபித்தால் மட்டுமே அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். தற்போது உள்ள இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் ,அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் கூடுதல் வீரராக இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் பயிற்சி முகாம் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications