மும்பை: மும்பை அணியின் இளம் வீரர் கேமரூன் க்ரீன் டிரேடிங் முறையில் ஆர்சிபி அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை அனைத்து அணிகளும் வெளியிட்டுள்ளன. அதில் மும்பை அணி 6 வெளிநாட்டு வீரர்கள், 5 உள்ளூர் வீரர்களை விடுவித்துள்ளதாக அறிவித்தது. ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, மும்பை அணிக்கு ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அவர் குஜராத் அணியால் தக்க வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
