
பார்ம்
இந்த தொடருக்காக சிஎஸ்கே அணி சில முக்கியமான வீரர்களை அதிகம் நம்பி இருக்கிறது. அதன்படி ராயுடு, தோனி, ரெய்னா, டு பிளசிஸ், ஜடேஜா, உத்தப்பா, பிராவோ, சாம் கரன், தாஹிர் ஆகிய வீரர்களை நம்பி உள்ளது. இதில் ஜடேஜா, சாம் கரன் மட்டுமே பார்மில் இருக்கிறார்கள்.

பார்ம் இல்லை
மற்ற வீரர்கள் யாரும் சிஎஸ்கே அணியில் பார்மில் இல்லை . பிராவோ கடந்த ஒன்றரை வருடமாக நடந்த லீக் போட்டிகள் எதிலும் ஆதிக்கம் செலுத்தவில்லை. உத்தப்பா மூன்று வருடமாக பெரிய அளவில் அதிரடியாக ஆடவில்லை.

ஆடவில்லை
இன்னொரு பக்கம் தாஹிர், ரெய்னா இரண்டு பேருமே கடந்த இரண்டு வருடமாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை. தோனி, டு பிளசிஸ், ராயுடு போன்றோர் மிக மோசமான பார்மில் உள்ளனர். இவர்கள் யாரும் முதல் தர போட்டிகளில் பெரிதாக ஆடவில்லை. பயிற்சியும் மேற்கொள்ளவில்லை.

எப்படி?
சென்னை அணி இப்படி நம்பி இருக்கும் வீரர்கள் எல்லோரும் பார்ம் அவுட்டில் இருப்பதால் சென்னை அணி நிர்வாகம் கொஞ்சம் பதற்றத்தில் உள்ளது. வீரர்கள் எல்லோரும் நம்பிக்கை அளிக்காத காரணத்தால் இந்த வருடமும் கடந்த வருடம் போல வீரர்கள் சொதப்பி விடுவார்களே என்று அணி நிர்வாகம் கவலை அடைந்துள்ளது.

சில நம்பிக்கை
இதனால் சிஎஸ்கே அணி சில மாற்று வீரர்களை தயாராக வைத்து இருக்கும் என்று கூறுகிறார்கள். இளம் மாற்று வீரர்கள் இருப்பார்கள் . ஏதாவது ஒரு வீரர் தொடர்ந்து சொதப்பினால் அவர்களை இளம் வீரர்கள் மாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது .


Click it and Unblock the Notifications