
சென்னை
இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு சென்னை அணி யாரை எல்லாம் ஏலம் எடுக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. சிஎஸ்கே அணி குறி வைக்க போகும் வீரர்கள் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. சிஎஸ்கே இந்த சீசனுக்காக ஒரு வெளிநாட்டு வீரரை ஏலம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

எப்படி
அதன்படி 2021 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி எடுக்க வாய்ப்பு இருக்கும் வீரர்கள் குறித்து கம்பீர் தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார். கம்பீர் அளித்திருக்கும் பேட்டியில், சிஎஸ்கே அணி இந்த முறை ஆல் ரவுண்டர்களைத்தான் குறி வைக்கும். சிஎஸ்கே ஓப்பனிங் வீரர்கள் மீதுதான் குறி வைக்க வாய்ப்பு இல்லை.

கம்பீர்
அனுபவம் வாய்ந்த ஆல் ரவுண்டர்களை சிஎஸ்கே அணி எடுக்கும். அதன்படி கிறிஸ் மோரிசை சிஎஸ்கே எடுக்க வாய்ப்புள்ளது. ஒரு வெளிநாட்டு வீரருக்கு சென்னை அணி வெளிநாட்டு வீரரை எடுக்க வாய்ப்பே இல்லை. ஆல் ரவுண்டர் இடத்துக்குத்தான் சிஎஸ்கே குறி வைக்க போகிறது.

ஆல் ரவுண்டர்
இன்னொரு பக்கம் ஆல் ரவுண்டர் முன்னாள் பஞ்சாப் வீரர் கிருஷ்ணப்பா கவுதமை சென்னை அணி எடுக்கும் என்று கம்பீர் கூறியுள்ளார். இரண்டு பேரும் ஸ்பின் பவுலர்கள். நன்றாக பேட்டிங்கும் செய்வார்கள்.

சென்னை ஸ்பின்
இதனால் சென்னை அணி ஸ்பின் மற்றும் பேட்டிங் செய்ய கூடிய வீரர்களை எடுக்கும் என்று கம்பீர் கூறுகிறார். ஆகவே சென்னை அணி பெரும்பாலும் ராபின் உத்தப்பா, ரூத்துராஜ் ஆகியோர்களை ஓப்பனிங் வீரர்களாக களமிறக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications