For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை பக்கமே போக முடியாது.. தோனிக்கு சென்ற அதிர்ச்சி செய்தி.. கடும் கலக்கத்தில் சிஎஸ்கே..மீண்டுமா?

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சென்னையில் போட்டிகள் நடப்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

14வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 18ம் தேதி நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் முக்கியமான வீரர்களை குறி வைத்து இந்த ஏலத்திற்காக காத்து இருக்கிறது.

1000க்கும் அதிகமான வீரர்கள் இதில் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். இதில் பிசிசிஐ இறுதியாக 292 வீரர்களை ஏலத்திற்கு தேர்வு செய்தது. ஏலத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ஐபிஎல்

ஐபிஎல்

2021 ஐபிஎல் தொடரில் சென்னையில் போட்டிகள் நடப்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இது சிஎஸ்கே அணிக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. 2021ல் ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. இதற்காக சிஎஸ்கே தயாராகி வருகிறது.

தேர்தல்

தேர்தல்

இந்த நிலையில் இதே ஏப்ரல் மாதம் தமிழகத்தில் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மேற்கு வங்கம், கேரளாவிலும் இதே சமயத்தில் தேர்தல் நடக்கும். இதனால் இங்கு ஐபிஎல் போட்டிகள் நடப்பது சிரமம் என்கிறார்கள்.

எப்படி

எப்படி

சென்னையிலும், கொல்கத்தாவிலும் இதனால் ஐபிஎல் போட்டிகள் நடப்பது கஷ்டம். பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரண்டு மாநிலங்களிலும் மேட்ச் நடக்க வாய்ப்பை குறைவு. 2018ம் வருடம் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடக்கவில்லை. காவிரி போராட்டம் காரணமாக சென்னையில் நடக்கவில்லை.

சிக்கல்

சிக்கல்

அதன்பின் 2020ல் கொரோனா காரணமாக சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை. இந்த நிலையில் இந்த வருடமும் சென்னையில் போட்டி நடப்பது சந்தேகம் ஆகியுள்ளது. இந்த போட்டிகள் ஒருவேளை சென்னையில் நடக்கவில்லை என்றால் சிஎஸ்கே அணி பெரிய அளவில் பாதிக்கப்படும்.

வீரர்கள்

வீரர்கள்

வீரர்கள் தேர்வு பெரிய அளவில் பாதிக்கப்படும். ஹோம் கிரவுண்ட் ஆதரவு இல்லாமல் போகும். அதோடு சிஎஸ்கே அணி ஸ்பின் பவுலர்களை நம்பி மட்டுமே களமிறங்க முடியாது. மொத்தமாக இதற்காக பிளானை மாற்ற வேண்டிய கட்டாயம் சிஎஸ்கே அணிக்கு ஏற்படும்.

ஐபிஎல்

ஐபிஎல்

சென்னையை நம்பி மட்டுமே இதனால் சிஎஸ்கே அணி பிளான்களை வகுக்க முடியாது. அனைத்திற்கும் சிஎஸ்கே அணி தயாராக இருக்க வேண்டும். இதனால் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடக்க வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Sunday, February 14, 2021, 13:04 [IST]
Other articles published on Feb 14, 2021
English summary
CSK may not get Chennai as their home ground in IPL 2021 due to TN assembly elections.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+