
சிஎஸ்கே
சிஎஸ்கே அணியில் தற்போது இந்திய ஸ்பீட் பவுலர்கள் குறைவாக உள்ளனர். ஷரத்துல் தாக்கூர், தீபக் சாகர் ஆகிய இரண்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர். இந்திய பவுலர்களில் லெப்ட் ஹேண்ட் ஸ்பீட் பவுலர்கள் யாரும் சிஎஸ்கே அணியில் இல்லை.

இந்தியா
இதனால் இந்தியாவை சேர்ந்த லெப்ட் ஹேண்ட் ஸ்பீட் பவுலர்களை சிஎஸ்கே குறி வைக்கும் என்று கூறுகிறார்கள். ஒரே ஒரு இளம் லெப்ட் ஹேண்ட் ஸ்பீட் பவுலரை கண்டிப்பாக சிஎஸ்கே குறி வைக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி பிரதீப் சங்வான் என்ற இளம் வீரரை சிஎஸ்கே எடுக்க வாய்ப்புள்ளது.

கடந்த சீசன்
பிரதீப் சங்வான் கடந்த இரண்டு சீசனாக ஐபிஎல் போட்டியில் ஆடவில்லை. 2018 ஐபிஎல் போட்டியில் பிரதீப் சங்வான் மும்பை அணியில் ஆடினார். இதுவரை மொத்தமாக 39 ஐபிஎல் போட்டிகளில் 35 விக்கெட்டுகளை எடுத்தார். ஐபிஎல் தொடருக்காக டெல்லி அணியில் இவர் சிறப்பாக ஆடினார்.

டெல்லி அணி
2009ல் டெல்லி அணியில் 13 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்தார்.தற்போது சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மிகவும் சிறப்பாக ஆடினார். டெல்லி அணிக்காக சையது முஷ்டாக் கோப்பை போட்டியில் பிரதீப் சங்வான் 4 போட்டியில் 7 விக்கெட் எடுத்தார்.

நல்ல பார்ம்
தற்போது நல்ல பார்மில் இருக்கும் இவரை சிஎஸ்கே குறி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த விலைக்கு பிரதீப் சங்வானை சிஎஸ்கே எடுக்க முயலும் என்கிறார்கள். ராஜஸ்தான் போன்ற அணியும் இவரை குறி வைக்க முயலும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications