
சென்னை
இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எடுக்க போகும் வீரர்களின் லிஸ்ட் தயாராகிவிட்டது என்று கூறப்படுகிறது. நான்கு விதமாக பிரித்து வீரர்களை தேர்வு செய்ய சிஎஸ்கே அணி முடிவு செய்துள்ளது. முறைப்படி சிஎஸ்கே அணியில் ஒப்பனர்கள், ஸ்பீட் பவுலர்கள், ஸ்பின் பவுலர்கள். மிடில் ஆர்டர் வீரர்கள், ஆல் ரவுண்டர்கள், பினிஷர்கள் தேவை.

தேவை
ஆனால் சிஎஸ்கே அணி இதில் ஒரு ஓப்பனிங் வீரர், இரண்டு ஸ்பின் பவுலர், ஒரு பினிஷர் ஆகியோரை மட்டுமே குறி வைக்கும் என கூறுகிறார்கள் . அதன்படி ஒரு ஓப்பனிங் வீரருக்கு ஆரோன் பின்ச், மார்னஸ் லபுஷேன், டேவிட் மாலன் ஆகியோரில் ஒருவர் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

ஸ்பின்
ஸ்பின் பவுலிங்கில் பவான் நேகி, சித்தார்த் மணிமாறன் ஆகிய வீரர்களில் ஒருவர் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. பினிஷர் ரோலில் மேக்ஸ்வெல் அல்லது ஷாருக்கான் அணியில் எடுக்கப்படலாம். இதற்கான பிரத்யேக லிஸ்ட் தயாரிக்கப்படடுவிட்டது . இந்த லிஸ்டை தோனி ஆலோசனைக்கு பின் உருவாக்கி உள்ளது.

கொடுத்தார்
இதற்கான லிஸ்டை தோனி சிஎஸ்கே நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார். சில வீரர்களை எவ்வளவு கோடி கொடுத்து கூட வாங்குங்கள் என்று தோனி கூறியுள்ளார். ஆரோன் பின்ச் சிஎஸ்கே அணிக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications