
5 முறை கோப்பை
ஐபிஎல் தொடரின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இதுவரை தன்னுடைய அணிக்காக 5 முறை அவர் ஐபிஎல் கோப்பைகளை பரிசளித்துள்ளார். தன்னுடைய அணி வீரர்களை திறமையாக கையாண்டு அவர்களின் முழுத் திறமை வெளிவரும் வகையில் அவர்களை வழிநடத்தி வருகிறார்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி
நேற்றைய ஐபிஎல் 2020 தொடரில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வெற்றி கொண்டு 5வது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த முடிவு ஓரளவு முன்னமே கணிக்கப்பட்டதற்கு காரணம் அந்த அணியின் சிறப்பான ஆளுமைதான்.

5வது ஐபிஎல் கோப்பை
தொடரில் மற்ற அணிகள் சிறப்பாக வெற்றி பெறும்போதெல்லாம் இந்த அணி கோப்பையை கைப்பற்றுமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆயினும் தங்களை வெற்றிபெற யாராலும் முடியாது என்பதை தொடர்ந்து ஐந்தாவது முறையாக நிரூபித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
5taying here 🏆💙pic.twitter.com/ZBhj1w34pH
— Mumbai Indians (@mipaltan) November 10, 2020
வெற்றிக் கொண்டாட்டம்
இந்த கொண்டாட்டத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பதிவிட்டுள்ளது. இந்நிலையில் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தான் கொம்பை கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களை துரத்திக் கொண்டிருக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

பயிற்சியாளர்களுக்கு நன்றி
வீரர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பது மட்டுமே தன்னுடைய வேலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நேரத்தில் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்த பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications