For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் சர்மா, வசீம் அக்ரம் கட்டி அணைத்ததற்கு பாகிஸ்தான் வீரர் கண்டனம்.. இணையத்தில் சலசலப்பு

கொழும்பு : டி20 உலககோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக ரோஹித் ஷர்மாவை, வசிம் அக்ரம் கட்டித்தழுவியதை, முன்னாள் பாகிஸ்தான் வீரர் அகமது ஷேசாத் விமர்சித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையே கைகுலுக்காத கொள்கை தொடர்ந்து அமலில் இருக்கும் நிலையிலேயே இந்த சம்பவம் கொழும்பில் நடந்தது. இந்த விவகாரத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷேசாத், "வசிம் அக்ரம் எப்போதும் கைகுலுக்குவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை மோதலின் போது, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்தார். கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஆசிய கோப்பையில் இருந்து இந்த கைகுலுக்காத நடைமுறை தொடர்ந்து வருகிறது. போட்டிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன், "கைகுலுக்காத கொள்கை தொடரும்" என்று கொழும்பில் உள்ள ஒரு பிசிசிஐ அதிகாரி உறுதிப்படுத்தினார்.

ஆனால், களத்தில் நிலவும் இந்த சூழலுக்கு மாறாக, ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் வசிம் அக்ரமும் இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ரோஹித் ஷர்மாவும் களமிறங்குவதற்கு முன் எந்தவித பகைமையையும் காட்டாமல், அன்புடன் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வரவேற்றனர். இது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் இரு அணிகளின் கொள்கையை விமர்சித்துள்ளார்.

"எனக்கு இது புரியவில்லை. பாகிஸ்தான் புறக்கணிக்க அச்சுறுத்தியபோது, 'விளையாடுங்கள், விளையாடுங்கள். நாம் கோடிக்கணக்கில் இழக்கிறோம்' என்று கூறி பின்வாங்கினர். சரி, நீங்கள் அந்த நாட்டில் விளையாடுகிறீர்கள். கைகுலுக்க விரும்பவில்லையா? உங்கள் கைகளை சுத்தப்படுத்திக்கொண்டு, பிறகு கைகுலுக்குங்கள். அது மோசமாகத் தெரியாது. ஆனால் இது? எனக்கு புரியவே இல்லை," என்று அமீர் கூறினார்.

போட்டிக்குப் பிறகு எந்த வீரர்களும் அல்லது துணை ஊழியர்களும் கைகுலுக்கவில்லை. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கௌரவிக்கவும், ஆபரேஷன் சிந்துருக்குப் பிறகு இந்திய இராணுவத்திற்கு ஒற்றுமையைக் காட்டவும் சூர்யகுமார் யாதவ் இந்த நடைமுறையை கடைபிடித்து வருகிறார். போட்டிக்கு முந்தைய நாள், சூர்யகுமாரும் சல்மானும் கைகுலுக்குவதற்கு ஒப்புதல் அளிக்காததால், இந்த நிலை தொடரும் என்பது தெளிவாக இருந்தது.

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரோஹித் மற்றும் அக்ரம் இடையேயான அந்த சந்திப்பைக் குறிப்பிட்டபோது, ஷேசாத் தனது கருத்தை கூறினார். "வசிம் பாய் எப்போதும் கைகுலுக்குவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிப்பார். தேவைப்படும் இடங்களில் அவர் கைகுலுக்குவார்." இது விமர்சனமா அல்லது நல்லது என்று நினைக்கிறீர்களா என தொகுப்பாளர் கேட்க, "இல்லை, இது ஒரு நல்ல விஷயம். அவருக்கு என சில எடுத்துக்காட்டுகள் உள்ளன. நீங்கள் எங்கிருந்தாலும், பொருத்தமானதைச் செய்யுங்கள் என ஷேசாத் பதிலளித்தார்.

Story first published: Monday, February 16, 2026, 16:22 [IST]
Other articles published on Feb 16, 2026
English summary
The Colombo hosted India Pakistan T20 World Cup fixture drew attention to the continued handshake policy, with players like Rohit Sharma and Vasi Akram showing cordial gestures. Analysts and former cricketers debated the approach, noting the policy’s persistence amid tense rivalry and its impact on sport diplomacy.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+