செஞ்சூரியன் : இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஒரு மிகப்பெரிய சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
ஆனால் இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. தற்போது அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 94 போட்டிகளில் விளையாடி 489 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்தத் தொடரில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 500 விக்கெட்டுகளை தொட்ட இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
