செஞ்சூரியன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ஷர்துல் தாக்கூர் தலையில் பந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பாக்சிங் டே அன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தடுமாறி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
