ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு கேப்டன் கேஎல் ராகுல் பதிலளித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது. டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்ட நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்படவுள்ளார். ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கு முன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் சிறப்பாக கேப்டன்சி மேற்கொண்டார்.
