கேப் டவுன்: தென்னாப்பிரிக்கா மண்ணில் ஆடிய இந்திய வீரர்களில் சிறப்பாக ஆடிய ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டும் தான் என்று ஜாம்பவான் வீரர் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.
31 ஆண்டுகளாக இந்திய அணியால் தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. அந்த வரலாறு மீண்டும் தென்னாப்பிரிக்கா அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலமாக மீண்டும் வரலாறு தொடர்கிறது.
