பெரிய மாற்றம்
இது பலரும் முன்பே குறிப்பிட்டாலும், இப்போது அணியில் உள்ள சூழ்நிலைக்கு பொருத்தமாக உள்ளது. மேலும், நல்ல பார்மில் இருக்கும் ரோஹித் சர்மாவுக்கு இது டெஸ்ட் போட்டிகளில் மிகப் பெரிய மாற்றமாக இருக்கும்.
அணியில் சிக்கல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆட உள்ள இந்திய டெஸ்ட் அணியில் ஆட உத்தேச அணியில் உள்ள அத்தனை வீரர்களும் தயாராக உள்ளனர். ஆனால், 11 வீரர்கள் மட்டுமே ஆட முடியும் என்ற நிலை. இதில் குறிப்பாக மிடில் ஆர்டரில் இடம் பெற ரஹானே, ரோஹித் சர்மா இடையே போட்டி நிலவுகிறது.
பேட்டிங் வரிசை
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் துவக்க வீரர்கள் மாயங்க் அகர்வால், ராகுல், அடுத்ததாக புஜாரா, கோலி, ஹனுமா விஹாரி இடம் பெறுவர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் மிடில் ஆர்டரில் இடம் பெறுவார். இந்த ஆறு வீரர்கள் தவிர நான்கு பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெறுவர். மீதமுள்ள ஒரு மிடில் ஆர்டர் இடத்திற்கு ரஹானே, ரோஹித் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
ரஹானே பார்ம்
இவர்களில் ரஹானே சமீப காலமாக சரியான பார்மில் இல்லை. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவில் ரன் குவிக்காத அவர், கவுன்டி டெஸ்ட் போட்டிகள், பயிற்சிப் போட்டி என அனைத்திலும் சொதப்பி இருக்கிறார்.
ரோஹித் அனுபவம்
ஒரு போட்டியில் நன்றாக ஆடினால், இரண்டு போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்து ஆட்டமிழந்து வருகிறார். ரோஹித் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடியதில்லை எனும் நிலையும் உள்ளது. இவர்களில் யாரை தேர்வு செய்வது?
கங்குலி யோசனை
இந்த நிலையில் தான் முன்னாள் கேப்டன் கங்குலி அதிரடி யோசனை கூறி இருக்கிறார். ரோஹித் சர்மா துவக்க வீரராக இறக்கவும், ரஹானேவை மிடில் ஆர்டரிலேயே ஆட வைத்து அணிக்கு பலம் சேர்க்கலாம் என்றும் கூறி இருக்கிறார்.
ஏன் ரோஹித்?
ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக பார்க்கப்படுவதில்லை. ஆனால், அவரை துவக்க வீரராக ஆட வைக்க வேண்டும் என கங்குலி கூற ஒரு காரணம் உள்ளது. உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதங்கள் அடித்து இருந்தார் ரோஹித் சர்மா. டெஸ்ட் போட்டிகளிலும் துவக்க வீரராக ஆடினால் அதை அப்படியே அவர் தொடருவார் என கருதுகிறார் கங்குலி.
துவக்க வீரர்கள் யார்?
தற்போது டெஸ்ட் போட்டியில் துவக்க வீரர்களாக இருக்கும் மாயங்க் அகர்வால், ராகுல் இருவரில் ராகுல் நிலை சந்தேகமாகத்தான் உள்ளது. உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடி இருந்தாலும், பயிற்சிப் போட்டியில் சொதப்பினார். அவரை நீக்கி விட்டுத் தான் ரோஹித்தை அந்த இடத்தில் ஆட வைக்க வேண்டும்.
பெரிய வாய்ப்பு
இந்த நிலையில் கங்குலி கூறியுள்ள யோசனைப்படி ரோஹித் சர்மா துவக்க வீரராக களமிறங்கி ரன் குவித்து நிரூபித்து விட்டால், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வித போட்டிகளிலும் அவரே துவக்க வீரராக வலம் வருவார்.