மும்பை : இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றிலேயே தென்னாப்பிரிக்காவை மட்டும் தான் இதுவரை நமது அணி டெஸ்ட் தொடரில் வென்றதில்லை. இந்த வரலாற்றை மாற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி இம்முறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் 3 பேருமே பெரிய ஸ்கோரை அடித்தால் மட்டுமே அது முடியும்.

இந்த தொடரில் விராட் கோலி களமிறங்கிய முதல் இன்னிங்ஸ் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விராட் கோலி 2017 18 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். இதில் ஆறு இன்னிங்ஸில் 286 ரன்கள் அடித்தார்.
இதில் சராசரியாக 47 ரன்கள் தான் அடித்து இருந்தார். எனினும் அந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இதேபோன்று 2021 மற்றும் 22 ஆம் ஆண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் களம் இறங்கிய விராட் கோலி 4 இன்னிங்சில் 161ல் சேர்த்தார். சராசரியாக 40 ரன்கள் அடித்திருந்தார். இம்முறை தற்போது விராட் கோலி நல்ல பார்மில் இருப்பதால் இம்முறையும் சாதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.