கராச்சி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் எதிரணியின் ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
விளையாட்டில் அரசியல் கலக்கக் கூடாது என்றும் ஆனால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளின் சொந்த நிலைப்பாடு என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது லங்கா பிரீமியர் லீக் தொடருக்காக கல்லே கிளாடியேட்டர் அணிக்காக பணியாற்றிவரும் அவர், ஐபிஎல் போன்றே லங்கா பிரீமியர் லீக் தொடரும் சிறப்பான வரவேற்பை பெறும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்த அணியின் லீக் போட்டிகளான ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர்களில் பங்கேற்று விளையாட வேண்டும் என்று பாகிஸ்தானின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார். விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது லங்கா பிரீமியர் லீக் தொடரின் கல்லே கிளாடியேட்டர் அணிக்காக செயலாற்றிவரும் அவர், ஐபிஎல்லை போலவே லங்கா பிரீமியர் லீக்கும் அதிகமான பார்வையாளர்களை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இத்தகைய லீக் போட்டிகளில் இளம் வீரர்கள் மூத்த வீரர்களிடம் அதிகமான அனுபவங்களை பெற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.