
பிரச்னை தான் என்ன?
மேலும் ரோகித் சர்மாவுடன் என்ன தான் பிரச்சனை? உங்களுக்கு ரோகித் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக செய்திகள் வெளியாகி வருவது உண்மையா? என கேட்கப் பட்டன. அப்போது கோலி கூறியதாவது:

லாபம் உள்ளதா?
நானும் சில செய்திகளை கேள்விப்பட்டேன். இதுபோன்ற செய்திகள் வெளியில் எங்கிருந்து வருகின்றன? யாரால் இதற்கு லாபம்? உண்மை என்னவென்றால், கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் அணி சிறப்பாக விளையாடுகிறது.

நம்பிக்கை
அணியில் எந்தவி பிரச்சனையும் இல்லை என்பதற்கு இதுவே சான்று. அணியில் எல்லோரும் ஒருவருக்கொருவர் மீது நம்பிக்கை மற்றும் மரியாதை வைத்து உள்ளனர் என்றார்.

நான்சென்ஸ்
அப்போது, விராட் கோலி வேற ஏதோ சொல்ல முயன்றார். அந்த சமயத்தில் அப்பொழுது அவரைத் தடுத்த அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, மிகவும் ஆக்ரோஷமாக பேசினார். அவர் கூறியதாவது: நான்சென்ஸ். அணியை விட வேற யாரும் எந்த நபரும் முக்கியம் இல்லை. ஏன் அது நானாக இருந்தாலும் சரி, விராட் அல்லது வேற யாராக இருந்தாலும் சரி என்று சீறினார்.


Click it and Unblock the Notifications