மும்பை: வான்கடே மைதானத்தில் நுழைய தடை நீடிப்பதால், வரும் 14ம் தேதி அங்கு நடைபெற உள்ள மும்பை - கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டத்தை நேரில் பார்க்க கொல்கத்தா அணியின் சக உரிமையாளரான ஷாரூக்கானுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு மும்பை - கொல்கத்தா அணிகள் வான்கடே மைதானத்தில் விளையாடின. அப்போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அப்போது மைதானத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரியுடன் ஷாரூக்கான் மோதலில் ஈடுபட்டார். இதனால், வான்கடே மைதானத்தில் நுழைய ஷாரூக்கிற்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப் பட்டது.

இந்நிலையில், வரும் 14ம் தேதி மும்பை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியை நேரில் பார்க்க கொல்கத்தா அணியின் சக உரிமையாளரான ஷாரூக்கிற்கு அனுமதி கிடைக்கவில்லை.
இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஷாரூக்கான் மீதான தடை தொடர்கிறது. எனவே, அவர் வான்கடே மைதானத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்' என்றார்.