
கோட்லா மைதானம்
டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. அந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்து வருகிறது. மேலும், போட்டிக்கு போட்டி, மந்தமான ஆடுகளமாக மாறி வருகிறது.

குழப்பம்
டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூட தன் அனுபவத்தால் அந்த ஆடுகளத்தின் தன்மையை கணிக்க முடியாமல் திணறி வருகிறார். இந்த சூழ்நிலையில், மும்பை அணி டாஸ் வென்றால் என்ன தேர்வு செய்வது என்பது குறித்த குழப்பம் இருந்துள்ளது.
சச்சின் பரிசோதனை
எனவே, ஆடுகளத்தின் தன்மையை பரிசோதிக்க சச்சினே களமிறங்கினார். போட்டிக்கு முன் மைதானத்தின் உள்ளே நுழைந்த சச்சின், ஆடுகளத்தின் அருகே நின்று கை வைத்துப் பார்த்தார். பின்னர், முழுவதுமாக பரிசோதித்து சென்றார்.

வியப்பு
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதைக் கண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தன் வியப்பை தெரிவித்தார். இந்த ஆடுகளத்தில் இவர்கள் ஏன் பேட்டிங் தேர்வு செய்கிறார்கள் என்ற தன் கருத்தை கூறினார்.

மும்பை வெற்றி
ஆனால், மும்பை அணி கடைசி மூன்று ஓவர்களில் அதிரடி காட்டி ரன்கள் குவித்தது. பந்துவீச்சிலும் கலக்கி, டெல்லி அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சச்சின் தான் இந்த வெற்றிக்கு பின்னே இருக்கிறார். எப்படி?

சச்சின் யோசனை
சச்சின் ஆடுகளத்தை பரிசோதித்த பின்னர், டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்ய சொன்னதாக தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் வெற்றியும் பெற்றது.


Click it and Unblock the Notifications