
கடந்த வாரம்
ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் தேர்வாகி உள்ளனர். முக்கியமாக ஐபிஎல் தொடரில் இந்த முறை வீரர்கள் ஆடிய விதத்தை வைத்து பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வருண் சக்ரவர்த்தி, நடராஜன், சைனி உள்ளிட்ட பலர் ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு பெற்றது ஐபிஎல் மூலம்தான்.

ஆனால் என்ன
ஆனால் இந்திய அணியில் இந்த முறை மும்பை வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய வீரர்கள் பலருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அணியில் இருந்து ரோஹித் சர்மாவும் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மொத்தமாக தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சை
ஆனால் காலில் காயம் இருந்தாலும் கூட ரோஹித் சர்மா தொடர்ந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மும்பை அணிக்காக தொடர்ந்து இவர் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு காலில் காயம் என்று புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போது வலை பயிற்சியில் இவர் கலந்து கொண்டு இருப்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சந்தேகம்
இவரால் வலை பயிற்சி மேற்கொள்ள முடியும் போது ஏன் அணியில் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. கோலியும், சாஸ்திரியும் சேர்ந்து ரோஹித்தை புறக்கணித்துவிட்டார்கள் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பயிற்சியாளர் சாஸ்திரி அளித்த பேட்டியில், நான் தேர்வுக்குழுவில் இடம்பெறவில்லை. எனக்கும் அணி தேர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

தொடர்பு இல்லை
இந்திய அணி தேர்வில் நான் கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் ரோஹித் சர்மா அணியில் எடுக்கப்படாமல் போக காயம்தான் காரணம். அவரின் காயம் குறித்து அளிக்கப்பட்ட ரிப்போர்தான் காரணம் என்று சாஸ்திரி கூறியுள்ளார்.

விலகினார்
ரோஹித் சர்மா நீக்கம் சர்ச்சையானதை தொடர்ந்து ரவி சாஸ்திரி நைசாக சர்ச்சைகளில் இருந்து விலகி உள்ளார். ஆனால் ரோஹித் சர்மாவோ தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாருங்கள் என்னால் களத்தில் பேட்டிங் செய்ய முடிகிறது என்பதை உணர்த்தும் வகையில் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











