
என்ன காரணம்
இந்த நிலையில் அஸ்வினின் குடும்பத்தில் மொத்தம் 10 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருப்பதாக அவரின் மனைவி பிரீத்தி அஸ்வின் டிவிட் செய்துள்ளார். இது தொடர்பாக டிவிட் செய்துள்ள பிரீத்தி அஸ்வின், எங்கள் குடும்பத்தில் ஒரே வாரத்தில் 10 பேருக்கு கொரோனா வந்துவிட்டது.

கொரோனா
6 பெரியவர்கள், 4 சிறியவர்கள் என்று வரிசையாக பலருக்கு பாசிட்டிவ் வந்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் பலர் வைரஸால் பாதிக்கப்பட்டு வேறு வேறு மருத்துவமனைகள், குடும்பங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மிக கொடுமையான வாரம் இது.

மோசம்
எல்லோரும் முடிந்த அளவு சீக்கிரம் வேக்சின் எடுங்கள். உங்கள் குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க இதுவே ஒரே வழி. உடல் கூட சீக்கிரம் குணமாகிவிடும். ஆனால் மனரீதியாக ஆரோக்கியம் பெறுவது கஷ்டம். கடந்த 5-8 நாட்கள் எனக்கு மோசமாக இருந்தது.

தனிமை
எனக்காக பலர் இருந்தாலும், தனிமையில் மோசமாக கஷ்டப்பட்டேன். இந்த நோய் உங்களை மோசமாக தனியாக உணர வைக்கும், என்று அஸ்வினின் மனைவி பிரீத்தி அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். இப்படி குடும்ப உறுப்பினர்கள் பலர் பாதிக்கப்பட்ட காரணத்தாலேயே அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications