மீண்டும் சொதப்பல்
கொல்கத்தா அணி மீண்டும் டாப் ஆர்டரில் படு சொதப்பல் செய்தது. தொடக்க வீரர்கள் நிதிஷ் ராணா 22 ரன்கள், சுப்மன் கில் 11 ரன்களுக்கு வெளியேற அடுத்து வந்த வீரர்களும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் அந்த அணி 15 ஓவர்களில் கூட 100 ரன்களை தாண்டவில்லை. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய ரஸல் இந்த போட்டியிலும் அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 7வது வீரராக களமிறக்கினார் அணியின் கேப்டன் மோர்கன்.
பிரஷர்
16வது ஓவரில் களத்திற்கு வந்த அவர், அடித்து ஆட வேண்டிய பிரஷரால் தூக்கி அடிக்க முயன்று சுலபமாக அவுட்டானார். அவரை ஒரு வேளை முன்கூட்டியே களமிறக்கியிருந்தால் அணியின் ஸ்கோர் நன்கு உயர்ந்திருக்கும், ஆனால் மோர்கன் செய்யவில்லை என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
சோப்ரா விமர்சனம்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, கொல்கத்தா அணி ரஸலுக்கு முழு வாய்ப்பை கொடுப்பதில்லை. அவரை மிகக்குறைவான பந்துகளுக்கே களமிறக்குகின்றனர். எதிரணி வீரர்கள் ரஸல் களமிறங்கி விடுவாரோ என்ற அச்சத்தில் இருப்பார்கள். ஆனால் இவ்வளவு தாமதமாக அவர் களத்திற்கு வந்தால் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துவார்.
கொல்கத்தா அணியின் தவறு
10 ஓவர்களுக்குள் விக்கெட்கள் அதிகமாக விழுந்தால், எனது முடிவு ரஸலை களமிறக்குவதுதான். அந்த முடிவு தவறாகவும் முடியலாம். ஆனால் ஒருவேளை அது சரியாக அமைந்தால் கொல்கத்தா அணிக்கு நல்ல ஸ்கோர் கிடைக்கும். எனவே ரஸல் விஷயத்தில் கொல்கத்தா அணி தவறு செய்கிறது. அவரை முன்கூட்டியே களமிறக்கி நிறைய பந்துகள் ஆட வைக்க வேண்டும் என சோப்ரா தெரிவித்துள்ளார்.