
பாதியில்
ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என்று தென்னாப்பிரிக்க வீரர்கள் பலர் பாகிஸ்தான் தொடரில் பாதியில் வெளியேறினார்கள். இதனால் தென்னாப்பிரிக்க அணி பல ஏ வீரர்களை வைத்துத்தான் தொடரில் விளையாடியது. இதனால் பாகிஸ்தானும் எளிதாக வென்றது.

எப்படி
இந்த நிலையில் பாகிஸ்தானின் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வீரர்கள் பாதியில் வெளியேறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி இதை விமர்சனம் செய்துள்ளார். அதில், பாகிஸ்தானில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வீரர்கள் பாதியில் வெளியேறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பரிதாபம்
லீக் போட்டி ஒன்றில் விளையாடுவதற்காக சர்வதேச போட்டியில் இருந்து அவர்கள் வெளியேறி உள்ளார்கள்.இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற முடிவுகளை உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்று அப்ரிடி மிகவும் வருத்தப்பட்டு புலம்பி உள்ளார்.

பதிலடி
இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் நடக்கும் ஐபிஎல்லில் ஆட அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் ஒப்பந்தத்தின்படி அவர்கள் இந்தியா சென்றுதான் ஆகவேண்டும். இதிலென்ன தவறு என்று கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications