
எப்படி
கடந்த இரண்டு வாரமாக சென்னை வீரர்களுடன் சேர்ந்து இவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சிஎஸ்கே அணியில் கடந்த சீசனில் ரெய்னா இடம்பெறவில்லை. கடந்த சீஸனின் தொடக்கத்தில் ரெய்னாவின் உறவினர்கள் சிலர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டனர்.

கொலை
இதன் காரணமாக இந்தியா திரும்பியவர், அந்த தொடரை புறக்கணித்தார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் மீண்டும் ரெய்னா சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்று கேள்வி எழுந்தது. சென்னை அணிக்கும் இவருக்கும் கருத்த வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டது.

கருத்து
ஆனால் ரெய்னா திரும்பி வந்த பின் எந்த பிரச்சனையும் இல்லாமல் அணிக்குள் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் ரெய்னாவின் வருகை குறித்து சென்னை அணியின் சிஇஓ காசி விசுவநாதன் பேட்டி அளித்துள்ளார். அதில், ரெய்னா மிகவும் ஆர்வமாக இருக்கிறார். சிஎஸ்கே அணியில் ஆட வேண்டும் என்று ஆர்வமாக உள்ளார்.

ஆர்வம்
இவர் சையது முஷ்டாக் கோப்பை தொடரில் நன்றாக ஆடினார். அதன்பின்பும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார். விஜய் ஹசாரே கோப்பை போட்டி 50 ஓவர் போட்டி என்பதால் அதில் ஆடவில்லை. எங்களுடன் இவர் தீவிரமாக ரெய்னா பயிற்சி மேற்கொண்டு வருகிறார் .

ஏக்கம்
நன்றாக ஆட வேண்டும் என்ற ஏக்கம் அவரிடம் இருக்கிறது.அவர் மிகவும் திறமையானவர். அவர் சிஎஸ்கே அணிக்கு நிறைய செய்து இருக்கிறார். இவர்தான் கடனாத 10-12 வருடங்களுக்கு ஐபிஎல் தொடரில் அதிக ரன் எடுத்த வீரராக இருந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், என்று ரெய்னாவை பாராட்டி சென்னை சிஇஓ பேசி உள்ளார்.

சிறப்பு
இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கும் ரெய்னாவிற்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, ரெய்னாவை சிஎஸ்கே அணி ஏற்றுக்கொண்டுவிட்டது என்ற மெசேஜை சிஇஓ அனுப்பி உள்ளார். இதனால் ரெய்னா ஆடும் அணியில் இடம்பெறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.. ஏக்கத்தோடு சென்னை அணிக்கு திரும்பி வந்த ரெய்னாவிற்கு இது கண்டிப்பாக நல்ல செய்தியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications