
யார்
சாம் கரன், பிராவோ மட்டுமே சிஎஸ்கேவில் வெளிநாட்டு பாஸ்ட் பவுலர்கள். லுங்கி நிகிடி, பெஹன்டிராப் இன்னும் சிஎஸ்கே அணியோடு இணையவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் தோனிக்கு நெருக்கமாக இருக்கும் இரண்டு வீரர்களை தூக்கும் திட்டத்தில் அணி நிர்வாகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றது.

திட்டம் என்ன
அதன்படி சிஎஸ்கேவின் சாகருக்கு பதிலாக ஹரி சங்கர் ரெட்டியும் கொண்டு வரும் பிளானில் அணி நிர்வாகம் உள்ளது என்கிறார்கள். ஹரி சங்கர் ரெட்டி, தற்போது வலைப்பயிற்சியில் நன்றாக பவுலிங் செய்து வருகிறார். இதனால் அவரை அணிக்குள் கொண்டு வரும் திட்டத்தில் அணி நிர்வாகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

பதிலடி
இன்னொரு பக்கம் பிராவோவிற்கு பதிலாக வெளிநாட்டு வீரரை களமிறக்கும் திட்டத்திலும் அணி நிர்வாகம் உள்ளதாம். இதில் பிராவோ கடந்த இரண்டு வருடமாக பார்மில் இல்லை. இன்னொரு பக்கம் சாகரும் சரியாக பவுலிங் செய்ய முடியாமல் திணறி வருகிறார்.

தேவையில்லை
இரண்டு பேருமே சிஎஸ்கே அணியில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தோனிக்கு இவர்கள் நெருக்கம் என்பதால் அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு மேலும் இவர்களுக்கு சலுகைகள் வழங்காமல் மொத்தமாக நீக்கும் முடிவில் சிஎஸ்கே நிர்வாகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.


Click it and Unblock the Notifications