
சிஎஸ்கே
சிஎஸ்கே அணியில் தற்போது பவுலர்கள் பலரும் பார்மிற்கு வந்துவிட்டாலும் இன்னும் ஷரத்துல் தாக்கூர் மட்டும் பார்மிற்கு வரவில்லை. முதல் போட்டியில் மோசமாக பவுலிங் செய்த சாகர் அதற்கு அடுத்த போட்டியிலேயே பார்மிற்கு திரும்பினார். அந்த மேட்சில் பஞ்சாப்பிற்கு எதிராக 4 விக்கெட்டுகளை சாகர் எடுத்தார்.

சாகர்
ஆனால் ஷரத்துல் இன்னும் பார்மிற்கு திரும்பவில்லை. முதல் போட்டியில் ஒரு விக்கெட் எடுத்த ஷரத்துல் அதன்பின் விக்கெட்டும் எடுக்கவில்லை. எப்போதும் இவர் ரன் கொடுப்பது வழக்கம்தான் என்றாலும் விக்கெட் எடுத்து கொடுப்பார்.

ஆனால் இல்லை
ஆனால் கடந்த 2 போட்டிகளாக இவர் விக்கெட்டும் எடுப்பது இல்லை. இதனால் ஷரத்துலை அணியில் எடுக்க கூடாது, அவருக்கு மேலும் வாய்ப்பு வழங்க கூடாது என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு வேறு வீரரை களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

கோரிக்கை
ஆனால் ஷரத்துல் தாக்கூருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க சிஎஸ்கே கோச் பிளமிங் முடிவு செய்துள்ளார். ஷரத்துல் ஆடட்டும், அவர் பார்மிற்கு திரும்பட்டும். இப்போது நீக்க வேண்டாம் என்ற முடிவில் பிளமிங் மற்றும் தோனி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஏன்
இவர் நன்றாக பேட்டிங் செய்ய கூடியவர். இவர் அணியில் இருந்தால் கூடுதல் பேட்டிங் ஆப்ஷன் இருக்கும். இதனால் ஷரத்துல் தாக்கூரை நீக்கும் எண்ணம் சிஎஸ்கேவிற்கு இல்லை என்று தகவல்கள் வருகின்றன.


Click it and Unblock the Notifications