
டிரான்ஸ்பர்
எந்த வருடமும் இல்லாமல், இந்த வருடம் அதிக அளவில் வீரர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த வருடம் பெரிய அளவில் வீரர்கள் அணி மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் இந்த வருடம் அதிக அளவில் வீரர்கள் டிரான்ஸ்பர் செய்யப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.

தகவல்
கொரோனா காரணமாக இதுவரை 5 க்கும் அதிகமான வீரர்கள் வெளியேறி உள்ளனர். முக்கியமாக வெளிநாட்டு வீரர்கள் பலர் தொடரை புறக்கணித்து உள்ளனர். இதனால் இந்த வருடம் பல அணிகள் டிரான்ஸ்பர் விண்டோவை பயன்படுத்தி புதிய வீரர்களை தங்கள் அணியில் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

சிஎஸ்கே
இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே எந்த வீரர்களையும் டிரான்ஸ்பர் மூலம் எடுக்காது என்கிறார்கள். சிஎஸ்கே முதலில் ஒரு வீரரை டிரான்ஸ்பர் செய்யும் திட்டத்தில் இருந்துள்ளது. ஆனால் தோனி இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

தோனி முடிவு
யாரையும் புதிதாக எடுக்க வேண்டாம், யாரையும் வெளியேவும் அனுப்ப வேண்டாம். இதே அணி இருக்கட்டும் என்று தோனி அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் சிஎஸ்கே மொத்தமாக டிரான்ஸ்பர் விண்டோவை பயன்படுத்தாமல் புறக்கணிக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











