மொத்தமாக மாறியது.. இனி சிஎஸ்கேவின் ராஜ்ஜியம்தான்.. தோனி போட்ட "அந்த" உத்தரவு.. என்ன நடந்தது?
சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது. இதில் மும்பை வான்கடே மைதானம் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக மாறியுள்ளது.
ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே இன்று ஆட உள்ளது. மும்பையில் நடக்க உள்ள இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.
சிஎஸ்கே அணி இன்று பெரும்பாலும் அதே பிளேயிங் லெவனுடன் ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் ஆடிய அதே 11 வீரர்கள் இன்று நடக்கும் போட்டியிலும் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி
இந்த நிலையில் மும்பை வான்கடே பிட்ச் சிஎஸ்கேவிற்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. மும்பை பிட்ச் முன்பு முழுக்க முழுக்க பாஸ்ட் பவுலிங் - பேட்டிங் பிட்சாக இருந்தது. ஆனால் இதை சிஎஸ்கே அணி தற்போது தனக்கு சாதகமாக மாற்றியுள்ளது.

சாதகமாக மாற்றியுள்ளது
வான்கடே மைதானத்தை ஸ்லோ பால் மைதானமாக சிஎஸ்கே மாற்றி உள்ளது. பாஸ்ட் பாலுக்கு ஒத்துழைத்த வான்கடே மைதானத்தை சிஎஸ்கே அணியின் சாகர், ஷரத்துல் தாகூருக்கு ஒத்துழைக்கும் வகையில் சிஎஸ்கே அணி மாற்றியுள்ளது. இதுதான் தற்போது சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

மும்பை
கடந்த போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிராக சிஎஸ்கே எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த இதுதான் காரணமாக இருந்தது. பிட்ச் ஸ்லோ பிட்சாக மாற்றப்பட்டதால் சாகர் எளிதாக ஸ்விங் செய்ய முடிந்தது. இவரின் ஸ்லோ ஸ்விங், ஸ்லோ பவுன்சர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்த வாய்ப்பு ஏற்படுத்தியது.

தோனி
இந்த பிட்ச் மாற்றத்திற்கு பின் தோனிதான் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. தோனி உத்தரவின் பெயரிலேயே மும்பை பிட்ச் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது என்கிறார்கள். இதனால்தான் தற்போது சேப்பாக்கத்தை விட மும்பை பிட்சை சிஎஸ்கே வீரர்கள் அதிகம் விரும்ப தொடங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications