எப்படி
இந்த போட்டியில் 16வது ஓவர் வரை பெங்களூர் அணிதான் தோல்வி அடையும், ஹைதரபாத் கண்டிப்பாக வெற்றிபெறும் என்று சூழ்நிலைதான் இருந்தது. கடைசி 24 பந்தில் 35 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைதான் இருந்தது. பெங்களூர் மீண்டு வருவதற்கான வாய்ப்பு சுத்தமாக இல்லை.
சிறப்பு
ஆனால் சபாஷ் அஹமது வீசிய 17வது ஓவரில் மொத்தமாக ஆட்டம் மாறியது. அந்த ஓவரில் அடுத்தடுத்து பிரைஸ்டோ, மணீஷ் பாண்டே அவுட் ஆனார்கள். பின் அதே ஓவர் சமத் அவுட் ஆனார். ஹைதராபாத் அணியின் ஹிட்டர்கள் மூன்று பேரும் ஒரே ஓவரில் அவுட் ஆனார்கள். இந்த ஒரு ஓவர்தான் மொத்தமாக போட்டியை மாற்றியது.
போட்டி மாறியது எங்கே
இதற்கு கோலியின் கேப்டன்சிதான் காரணம். முதல் 10 ஓவர்களில் சபாஷ், ஹர்ஷல் இருவரையும் கோலி சரியாக பயன்படுத்தவில்லை. இதை பலரும் விமர்சனம் செய்தனர். ஏன் இவர்களுக்கு ஓவர் கொடுக்கவில்லை, ஏன் ஓவர் ரொட்டேட் செய்யவில்லை என்று விமர்சனம் செய்தனர். ஆனால் கோலி பிட்ச் மாற வேண்டும் என்று காத்து இருந்தார்.
ஸ்பின்
நேற்று மேட்ச் போக போக பிட்ச் நன்றாக டர்ன் ஆனது. இதனால் கடைசி கட்டத்தில் சபாஷ் அகமதுக்கு ஓவர் கொடுத்தார். அந்த ஓவரில்தான் மொத்தமாக ஆட்டம் மாறியது. பவுலர்களை ரிசர்வ் செய்து வைத்து, அவர்களுக்கு கடைசியில் வாய்ப்பு கொடுத்து ஆட்டத்தை மாற்றினார். முன்னதாக கொல்கத்தாவிற்கு எதிராக மும்பை இதேபோல் வென்றது.
அட்டாக்
அப்போது ரோஹித் அட்டாக்கிங் பீல்டிங் வைத்து இருந்தார். ஆனால் இங்கு கோலியோ, பந்தை பீட்டில் போட சொல்லி, பேட்ஸ்மேன்களை அடிக்க விட்டு விக்கெட் எடுத்தார். கடைசி 4 ஓவர்கள் நேற்று ஹைதராபாத் அணி 6 விக்கெட்டை இழந்தது.
.
விக்கெட் இழப்பு
கடைசி 4 ஓவர்களை பெஸ்ட் பவுலர்களை வைத்து கோலி வீச வைத்தார். சென்னை பிட்சில் கடைசியில் ஆடுவது கஷ்டம் என்பதால் கோலி இப்படி செய்தார். இதுதான் பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. கோலியின் கேப்டன்சி நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக மிகவும் சிறப்பாக இருந்தது