For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தண்ணிக்காட்டிய இளம் வீரர்.. சிக்கி திணறிய ஆர்சிபி. பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி ஆர்சிபி அணி படுதோல்வியடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 179/5 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 145/8 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்த சீசனில் தனது 3வது வெற்றியை பதிவு செய்து பஞ்சாப் கிங்ஸ் அணி 5வது இடத்திற்கு முன்னேறியது.

3 முக்கிய மாற்றங்கள்..சொதப்பல் வீரருக்கு மீண்டும் வாய்ப்பு..ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் எடுத்த ரிஸ்க்3 முக்கிய மாற்றங்கள்..சொதப்பல் வீரருக்கு மீண்டும் வாய்ப்பு..ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் எடுத்த ரிஸ்க்

தொடக்கம்

தொடக்கம்

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் வீரர் பிரம்சிம்ரன் சிங் 7 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் - கிறிஸ் கெயில் ஜோடி அதிரடி காட்டினர்.

மிரட்டிய கெயில்

மிரட்டிய கெயில்

குறிப்பாக கெயில் ஜேமிசன் வீசிய ஒரே ஓவரில் கிறிஸ் கெயில் அடுத்தடுத்து 5 பவுண்டரிகள் அடித்து மிரட்டினார். இவர்களின் சிறப்பான பார்ட்னர்ஷிப்பால் பஞ்சாப் அணி 91 ரன்கள் எடுத்தது. ஆனால் இந்த பார்ட்னர்ஷிப்பை டேனியல் சாம்ஸ் பிரித்தார். சிறப்பாக ஆடி வந்த கிறிஸ் கெயில் 24 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அவுட்டானார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

பஞ்சாப் தடுமாற்றம்

பஞ்சாப் தடுமாற்றம்

இந்த விக்கெட்டிற்கு பிறகு பஞ்சாப் அணியில் பெரும் இடி விழுந்தது. கெயிலுக்கு அடுத்து வந்த நிகோலஸ் பூரண் மீண்டும் ஒரு முறை டக் அவுட்டாகி வெளியேறினார். இந்த தொடரில் அவரின் 4வது டக் அவுட் இதுவாகும். தீபக் ஹூடா 5 ரன்கள், ஷாருக்கான் டக் அவுட்டாகி வெளியேறினர். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோரில் மந்தம் ஏற்பட்டது.

இலக்கு

இலக்கு

பின்னர் பொறுப்பை எடுத்துக்கொண்ட கே.எல்.ராகுல் கடைசி சில ஓவர்களில் காட்டடி விளாசினார். 57 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 91 ரன்கள் அடித்தார். குறிப்பாக ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் 20 ரன்கள் பறந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

ஓப்பனிங் திணறல்

ஓப்பனிங் திணறல்

இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி ஆரம்பம் முதலே திணறியது. தொடக்க வீரர் தேவ்தத் பட்டிக்கல் 7 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி ராஜட் பட்டிடர் ஜோடி நீண்ட நேரம் நிலைத்து ஆடினர். ஆனால் அவர்களால் அதிரடியாக ரன் சேர்க்க முடியவில்லை. இதனால் 6 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 36 ரன்களை மட்டுமே எடுத்தது.

அபாரம்

அபாரம்

ரன்கள் அடிக்க முடியாமல் பிரஷரில் இருந்த போது பஞ்சாப் பவுலர் ஹர்ப்ரீத் பிரார் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவரின் பந்துவீச்சில் ஆர்சிபியின் அதிரடி விரர்கள் விராட் கோலி (35), க்ளென் மேக்ஸ்வெல் (0), டிவில்லியர்ஸ் (3) அடுத்தடுத்து வெளியேறினர்.

படுதோல்வி

படுதோல்வி

இதனால் கடும் பிரஷரில் ஆர்சிபி அணியின் விக்கெட்கள் சரிந்துக்கொண்டே இருந்தது. பின்னர் வந்த ஹர்ஷல் பட்டேல் 13 பந்துகளில் 31 ரன்கள் விளாசி மிரளவைத்தார். எனினும் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணியால் விக்கெட்களை இழந்து ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Story first published: Friday, April 30, 2021, 23:21 [IST]
Other articles published on Apr 30, 2021
English summary
Skipper KL Rahul's 91* helps Punjab kings to Set a 180 target to RCB
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X