
எப்படி?
இந்த நிலையில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் முதல் ஐபிஎல் போட்டியில் கோலி - ரோஹித் சர்மா நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. இன்று மைதானத்திற்கு வந்ததில் இருந்தே ரோஹித் - கோலி நெருக்கமாக காணப்பட்டனர். ஜாலியாக பேசிக்கொண்டே உள்ளே வந்தனர்.

கோபம்
இவர்களுக்கு இடையில் மோதல், ஈகோ மோதல் என்றெல்லாம் நிறைய கருத்துக்கள் வைக்கப்பட்டது. ரோஹித் - கோலி இடையே சண்டை இருக்கிறது. முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் வீரர்களை கோலி விரும்ப மாட்டார் என்றெல்லாம் நிறைய செய்திகள் வெளியாகின.

நெருக்கம்
அதிலும் ஐபிஎல் போட்டிகளில் இவர்களுக்கு இடையில் மோதல் அதிகம் இருக்கும் என்றெல்லாம் கருத்து நிலவி வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவருமே இன்று நெருக்கமாக காணப்பட்டனர். சிரித்துக்கொண்டே கையை கோர்த்துக்கொண்டு கோலி ரோஹித் இருவரும் சில நிமிடம் பேசிக்கொண்டு இருந்தனர்.

போட்டோ
இவர்கள் இருவரும் ஒன்றாக சிரித்துக்கொண்டு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து.. பாருங்க இவங்க ரெண்டு பேரும் க்ளோசாதான் இருக்காங்க.. இவங்களுக்கு இடையில் எந்த மோதலும் இல்லை.
மோதல்
ஈகோ மோதல் குறித்த வதந்திக்கு எல்லாம் இவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்று நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள். இத்தனை நாட்கள் இவர்களுக்கு இடையில் உரசல் என்று வெளியான செய்திகளுக்கு எல்லாம் ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











