
சர்ச்சை
இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குர்ணால் பாண்டியா நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இவர் பேட்டிங் செய்த போது ஸ்டிராட்டஜிக் டைம் அவுட்டில் சக மும்பை வீரர் அங்குள் ராய் இவருக்கு சானிடைசர் கொடுத்தார். கையை துடைத்துக் கொள்வதற்காக குர்ணால் பாண்டியாவிற்கு அங்குள் ராய் சானிடைசர் கொடுத்தார்.

குர்ணால்
இதை பயன்படுத்திய குர்ணால் பாண்டியா, அதை அப்படியே தூக்கி அங்குள் ராயிடம் தூக்கி வீசினார். அவர் முகத்தை கூட பார்க்காமல், கொஞ்சம் கூட அவரை மதிக்காமல் அப்படியே அந்த சானிடைசரை குர்ணால் பாண்டியா தூக்கி வீசினார்.

தவறு
அங்குள் ராய் கிரிக்கெட் போட்டிகளில் பெரிதாக ஆடியது இல்லை. இவர் பெரிய வீரர் கிடையாது. இதனால் அவரை மதிக்காமல் வேண்டும் என்றே குர்ணால் பாண்டியா இப்படி மோசமாக நடந்து கொண்டார். இந்த சம்பவம் பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளது.

அங்குள் ராய்
குர்ணால் இப்படி நடந்து கொண்டது வீடியோவாக வெளியாகி உள்ளது. சக வீரரை தரக்குறைவாக இவர் நடத்தியதாக பலர் புகார் வைத்து வருகிறார்கள். இது போன்ற திமிரான வீரர்களுக்கு இனியும் வாய்ப்பு கொடுக்க கூடாது என்று நெட்டிசன்கள் பலர் கொந்தளித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











