இதுக்கு ஏன் நான் டீமில் இருக்கணும்.. "அந்த" வீரரின் வருகையால் அப்செட்டில் சீனியர்.. சிஎஸ்கே சிக்கல்!
சென்னை: சிஎஸ்கே அணிக்குள் வந்து இருக்கும் முக்கியமான ஸ்பின் பவுலர் ஒருவரால் சீனியர் வீரர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இன்று டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது. சிஎஸ்கே அணியில் இன்று ஆட போகும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2019 சீசனில் சிஎஸ்கே அணிக்காக மிகவும் சிறப்பாக பவுலிங் செய்த வீரர் இம்ரான் தாஹிர். அந்த சீசனில் அதிக விக்கெட் டேக்கர் இவர்தான்.

மோசம்
ஆனால் 2020 சீசனில் இம்ரான் தாஹிருக்கு பெரிய அளவில் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 4 வெளிநாட்டு வீரர்கள் காம்பினேஷன் காரணமாக தாஹிருக்கு பெரிதாக சான்ஸ் கிடைக்கவில்லை. கடைசியில் சில போட்டிகளில் மட்டுமே தாஹிர் ஆடினார்.

கோபம் இல்லை
ஆனால் இதை பார்த்து தாஹிர் கோபம் அடையவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்தால் கொடுக்கட்டும். நான் எனக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன். அணிக்கு எது தேவையோ அதை செய்வேன், என்று இம்ரான் தாஹிர் குறிப்பிட்டு இருந்தார்.

அலி
இந்த நிலையில் வெளிநாட்டு ஸ்பின் பவுலர் தாஹிர் இருக்கும் போது கூடுதலாக இன்னொரு வெளிநாட்டு ஸ்பின் பவுலர் மொயின் அலி சென்னை அணியில் எடுக்கப்பட்டுள்ளார். இவர் ஆல் ரவுண்டர் என்பதால் இன்று கண்டிப்பாக இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்கிறார்கள். இதனால் மீண்டும் தாஹிர் ஓரம்கட்டப்பட வாய்ப்புள்ளது.

மோசம்
மொயின் அலி நன்றாக பேட்டிங் செய்வார். இவர் சிறப்பான ஆல் ரவுண்டர். தாஹிர் ஆல் ரவுண்டர் கிடையாது. இதனால் கடந்த வருடம் போல இந்த வருடமும் தாஹிர் ஓரம்கட்டப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கோட்டா
மொயின் அலி வருகையால் வெளிநாட்டு ஸ்பின் பவுலரின் கோட்டாவை அவரே பூர்த்தி செய்வார், தாஹிர் ஆட மாட்டார் என்கிறார்கள். இதனால் தாஹிர் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது. தொடர் புறக்கணிப்பால் அவர் அப்செட் ஆகியுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications