
ஷமி
நேற்று ஷமி மற்ற பவுலர்களை விட சிறப்பாக பவுலிங் செய்து இருந்தார். இந்த ஐபிஎல் தொடருக்கு முன் ஷமி ஆஸ்திரேலிய தொடரில் காயம் அடைந்தார். பவுன்சர் பந்து ஒன்று பட்டதில் இவர் காயம் அடைந்தார். அதில் இவரின் பவுலிங் செய்யும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் 4- மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

கிரிக்கெட்
அதோடு இனியும் ஷமி கிரிக்கெட் ஆடுவது கஷ்டம். அவருக்கு வயதாகிவிட்டது. அவருக்கு உடலில் ஏற்கனவே நிறைய காயம் இருக்கிறது. இந்த ஆஸ்திரேலிய தொடர்தான் அவருக்கு லாஸ்ட் என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

காயங்கள்
ஷமி உடல் முழுக்க பல இடங்களில் காயங்கள் உள்ளது. சில விபத்துகள் காரணமாக முதுகில் கூட எலும்புகள் முறிந்துள்ளன. ஏற்கனவே அவருக்கு இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இனி ஷமி ஆட முடியாது.. அவ்வளவுதான் அவரின் கதை க்ளோஸ் என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

மீண்டு வருவார்
ஆனால் ஒவ்வொரு முறையும் இவர் காயம் அடைந்த பின் அதில் இருந்து வேகமாக மீண்டும் வந்து, மீண்டும் களமிறங்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த முறையும் கை எலும்பு முறிவில் இருந்து நினைத்ததை விட மீண்டு வந்தது, ஷமி மிக சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். ஷமி இவ்வளவு வேகமாக மீண்டு வருவார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் யாருமே எதிர்பர்க்க்கவில்லை.

சிறப்பான கம்பேக்
அதிலும் 4 ஓவர் போட்டு 33 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை ஷமி நேற்று எடுத்தார். நேற்று பவுலிங் செய்ததிலேயே பஞ்சாப் அணியில் நன்றாக வீசியது ஷமி மட்டும்தான். டி 20 உலகக் கோப்பை தொடரில் இவர் ஆடுவது சந்தேகம் என்று காயம் காரணமாக கருதப்பட்டது.

இந்திய அணி
ஆனால் காயத்தை எல்லாம் தூக்கி வீசிவிட்டு.. அதிரடியான கம்பேக் கொடுத்து மீண்டும் விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் ஷமி விரைவில் மீண்டும் இந்திய அணியில் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.


Click it and Unblock the Notifications