
கஷ்டம்
இந்த நிலையில் இனி வரும் நாட்களில் பெங்களூர் அணி இதே பாஸ்ட் பவுலிங் ஜோடியை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்ஷல் பட்டேல், சிராஜ், கைலி ஜாமிசன் ஆகிய மூன்று பேர்தான் அணியில் தொடர்ந்து பவுலிங் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பின் பவுலர்களில் சில மாற்றம் செய்யப்படலாம்.

மாற்றம்
இந்த நிலையில் பெங்களூர் அணியில் சைனி மீண்டும் இடம்பெற வாய்ப்பு இல்லை என்கிறார்கள். கடந்த சீசனில் சைனி சுமாராக பவுலிங் செய்தார். அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த போது சைனி அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதிக அளவில் ரன் கொடுத்து சைனி ஏமாற்றம் அளித்தார்.

ரன்
முக்கியமாக பெங்களூர் அணி கடந்த சீசனில் சரிய பல போட்டிகளில் சைனி காரணமாக இருந்தார். இதனால் சைனிக்கு இனி பெங்களூர் அணியில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்கிறார்கள். நேற்று கோலியும் இதை ரகசியமாக சொல்லிவிட்டார். நேற்று ஹர்ஷல் பட்டேலை கோலி பாராட்டி பேசினார்.

பாராட்டு
இனி ஹர்ஷல் பட்டேல்தான் பெங்களூர் அணியின் டெத் ஓவர் பவுலர் என்று கூறினார். சைனியை குத்திக்காட்டுவது போல் கோலி இப்படி பேசினார். சிராஜ், கைலி ஆகியோரும் நன்றாக பவுலிங் செய்தனர். இதனால் இவர்கள் மூவரும் நீக்கப்பட மாட்டார்கள்.

இந்திய அணி
ஆகவே, சைனிக்கு ஆர்சிபியில் இனி பெரிய எதிர்காலம் இல்லை என்கிறார்கள். இந்திய அணியிலும் கூட சைனி இடம்பெறுவது கஷ்டம் ஆகியுள்ளது. கிடைத்த வாய்ப்பை சைனி சரியாக பயன்படுத்திக்கொள்ளாததால் அவரின் கிரிக்கெட் கேரியர் ஆபத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications