
டிவில்லியர்ஸ் அதிரடி
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 171/5 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 170 ரன்கள் வரை அடித்து ஒரு ரன்னில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கோலி, பட்டிக்கல், மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற அதிரடி மன்னன் ஏ.பி.டிவில்லியர்ஸ் பொறுப்புடன் ஆடி அசத்தினார்.

புகழ்ச்சி
முதலில் நிதானமாக ஆடி வந்த டிவில்லியர்ஸ் கடைசி சில ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 75 ரன்கள் விளாச டெல்லி அணிக்கு கடும் பிரஷர் விழுந்தது. இதனால் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது. மீண்டும் ஒருமுறை மிஸ்டர் 360-ன் ஆட்டத்தை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

மகிழ்ச்சி
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் கவாஸ்கர், டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டம் அனைவரையும் வாய்ப்பிழக்க செய்யும். அவரின் ஆட்டத்தை காண்பதற்கென உலகில் எங்கு வேண்டுமானலும் பயணிக்கலாம். ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் டிவில்லியர்ஸின் ஆட்ட முறை மற்றும் ஷாட்கள் அவ்வளவு மகிழ்ச்சியை தரும்.

பரிந்துரை
ஆர்சிபி அணி ஏன் டிவில்லியர்ஸை ஓப்பனிங் வீரராக களமிறக்க கூடாது. ஏனென்றால் 10வது ஓவருக்கு மேல்தான் அவரது அதிரடியை காண முடிகிறது. அவரை ஓப்பனிங்கிற்கு களமிறக்கினால் ஆட்டத்தின் 20 ஓவர்களிலும் ஏபிடிவில்லியர்ஸுன் ஆட்டத்தை நம்மால் காண முடியும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











