ரொம்ப துணிச்சல்.. ரோஹித், தோனி கூட இப்படி செய்யவில்லை.. கோலியின் அசகாய முடிவு.. என்ன நடக்குமோ!?
சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் பெங்களூர் கேப்டன் கோலி முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
கொல்கத்தாவிற்கும் பெங்களூருக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெங்களூர் டாஸ் வென்றது. டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சென்னை பிட்சில் சேசிங் செய்வது கடினமாகி உள்ளது. போக போக பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகம் ஆகும். இதனால் பெங்களூர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

எப்படி
இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் பெங்களூர் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர். பெங்களூர் அணியின் டேனியல் கிறிஸ்டின் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆடம் சாம்பா அணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்
ஆனால் வெளிநாட்டு வீரரை கோலி அணியில் எடுக்காமல் ராஜத் படித்தார் எடுக்கப்பட்டார். ஐபிஎல் போட்டிகளில் 4 வெளிநாட்டு வீரர் வரை ஆட முடியும். ஆனால் கோலியோ துணிச்சலாக மூன்று வீரர்கள் போதும் என்று முடிவு எடுத்துள்ளார்.

ஏன்
படித்தார் முதல் தர போட்டிகளில் ஸ்பின் பவுலிங்கில் நன்றாக ஆடி இருக்கிறார். அதேபோல் நன்றாக ஆப் பிரேக் ஸ்பின் செய்வார். இதனால்தான் அவரை எடுத்துள்ளார். சென்னை பிட்சில் இவர் நன்றாக பவுலிங் செய்ய வாய்ப்புள்ளது.

சென்னை பிட்ச்
இதன் காரணமாகவே டேனியல் கிறிஸ்டினை நீக்கிவிட்டு படித்தாரை கோலி அணியில் எடுத்துள்ளார். ரோஹித், தோனி போன்றவர்கள் கூட எப்போதும் தங்கள் அணியில் 4 வெளிநாட்டு வீரர்களை வைத்து இருப்பார்கள். ஆனால் கோலியோ துணிச்சலாக மூன்று வெளிநாட்டு வீரர்கள் போதும் என்று களமிறங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications