எப்படி
இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் பெங்களூர் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர். பெங்களூர் அணியின் டேனியல் கிறிஸ்டின் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆடம் சாம்பா அணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால்
ஆனால் வெளிநாட்டு வீரரை கோலி அணியில் எடுக்காமல் ராஜத் படித்தார் எடுக்கப்பட்டார். ஐபிஎல் போட்டிகளில் 4 வெளிநாட்டு வீரர் வரை ஆட முடியும். ஆனால் கோலியோ துணிச்சலாக மூன்று வீரர்கள் போதும் என்று முடிவு எடுத்துள்ளார்.
ஏன்
படித்தார் முதல் தர போட்டிகளில் ஸ்பின் பவுலிங்கில் நன்றாக ஆடி இருக்கிறார். அதேபோல் நன்றாக ஆப் பிரேக் ஸ்பின் செய்வார். இதனால்தான் அவரை எடுத்துள்ளார். சென்னை பிட்சில் இவர் நன்றாக பவுலிங் செய்ய வாய்ப்புள்ளது.
சென்னை பிட்ச்
இதன் காரணமாகவே டேனியல் கிறிஸ்டினை நீக்கிவிட்டு படித்தாரை கோலி அணியில் எடுத்துள்ளார். ரோஹித், தோனி போன்றவர்கள் கூட எப்போதும் தங்கள் அணியில் 4 வெளிநாட்டு வீரர்களை வைத்து இருப்பார்கள். ஆனால் கோலியோ துணிச்சலாக மூன்று வெளிநாட்டு வீரர்கள் போதும் என்று களமிறங்கி உள்ளார்.