மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 31வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. பஞ்சாப் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மறுபக்கம் மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். பனிப்பொழிவு காரணமாகவே மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மும்பை அணி சார்பாக மெரிடித் நீக்கப்பட்டு ஆர்ச்சர் இணைந்துள்ளார். அதேபோல் பஞ்சாப் அணி சார்பாக ஷிகர் தவான் இதுவரை காயத்தில் இருந்து குணமடையாததால், சாம் கரண் கேப்டனாக வந்தார். கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

பஞ்சாப் அணி விவரம்: அதர்வா, பிரப்சிம்ரன் சிங், ஷார்ட், லிவிங்ஸ்டன், சாம் கரண், ஜித்தேஷ் சர்மா, ஹர்ப்ரீத் சிங், ஷாரூக் கான், ஹர்ப்ரீத் பரார், ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிங்
மும்பை அணி விவரம்: ரோகித் சர்மா, இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார், டிம் டேவிட், திலக் வர்மா, அர்ஜுன் டெண்டுல்கர், ஹிர்த்திக் ஷோக்கீன், ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, பெஹ்ரண்டார்ஃப்