மும்பை: ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் சில வாரங்களில் நடக்கவுள்ள நிலையில், மும்பை அணி நிர்வாகம் தரப்பில் 11 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் நவ.26ஆம் தேதிக்குள் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதேபோல் டிரேடிங் முறையிலும் வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
