சென்னை : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 210 ரன்கள் குவித்தது. அதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 200 ரன்களை கடந்து ரன் குவித்த அணிகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது சிஎஸ்கே அணி.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 108 ரன்களும், சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்களும் குவித்தனர். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. இது சிஎஸ்கே அணியின் 34வது 200க்கும் அதிகமான ஸ்கோர் ஆகும்.

14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
மேலும், ஐபிஎல் தொடரில் மட்டும் சிஎஸ்கே அணி 31 முறை 200க்கும் அதிகமாக ஸ்கோர் எடுத்துள்ளது. அந்த வகையில் பெங்களூரு அணியை விட 5 முறை அதிகமாக இதை செய்து இருக்கிறது சிஎஸ்கே அணி. சிஎஸ்கே அணி இந்த சாதனையை செய்த போதும் லக்னோ அணி 19.3 ஓவர்களில் 211 ரன்கள் என்ற கடினமான இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.