கராச்சி: உலகின் தலைசிறந்த லீக் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்கியது. 8 அணிகளுடன் தொடங்கிய ஐபிஎல் தொடரின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது. ஐபிஎல் தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும், தொடருக்கான விளம்பர வருவாய், ஒளிபரப்பு வருவாய் உள்ளிட்டவை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது.
