அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு அணிகளும் பல்வேறு யுத்திகளை கடைப்பிடித்து வருகிறது.
அதில் ஆர்சிபி அணி கடைபிடித்து இருக்கும் யுத்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் எந்த வீரர்களை விடுவிக்கப் போகிறோம் என்பது குறித்து ஒவ்வொரு அணியும் பட்டியலை பிசிசிஐ இடம் அனுப்பி இருந்தது.
