சென்னை : சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார். அவர் அடுத்த ஐபிஎல் ஏலத்துக்கு முன் அந்த அணியால் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதன்பின் அவர் வேறு ஐபிஎல் அணிக்கு மாறக் கூடும் எனவும் கடந்த இரண்டு மாதங்களாக தகவல்கள் வலம் வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா தலைமையில் செயல்பட்டு வந்தது. அவருக்கு அடுத்ததாக அணியை வழிநடத்தக் கூடிய வீரர்களாக பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கருதப்பட்டனர். 2022 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி, தனக்கு கேப்டன் பதவி அளித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாறினார்.

IPL 2024 : இந்திய அணிக்கு ரோஹித் கேப்டன் இல்லை? மும்பை இந்தியன்ஸ் பதிவால் ரசிகர்கள் கொதிப்பு
அப்படி நடந்தால் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கும் என எதிர்பார்க்கலாம். அவரும் சிஎஸ்கே போன்ற வீரர்களை மதிக்கும் அணியைத் தான் இனி விரும்புவார். ஆனால், உலகின் நம்பர் 1 டி20 வீரரான சூர்யகுமார் யாதவ் ஏலத்தில் இடம் பெற்றால் அவரை வாங்க கடும் போட்டி இருக்கும். அதற்கு நடுவே போட்டி போட்டுத் தான் சிஎஸ்கே அணி அவரை வாங்க வேண்டி இருக்கும்.