
சிஎஸ்கே
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் சில விஷயங்கள் சரியாக இல்லை என்று முன்னாள் வீரர் கம்பீர் குறிப்பிட்டு இருக்கிறார். அதன்படி சிஎஸ்கே அணி ஏலத்திற்கு பின் வலுவாகவே இருக்கிறது. மற்ற அணிகளை விட சிஎஸ்கே அணியின் ஏலம் சிறப்பாகவே இருந்தது.

ஆனால் என்ன
ஆனால் சிஎஸ்கே அணி இன்னும் பிராவோவை நம்பி இருக்க முடியாது. இதனால்தான் அந்த அணி மொயின் அலி, கவுதம் இரண்டு வீரர்களை எடுத்துள்ளது. அதேபோல் சாம் கரன், ஜடேஜா இருவரும்தான் சிஎஸ்கே அணியில் போட்டியை பினிஷ் செய்வார்கள்.

பிராவோ
பிராவோவை நம்பி இருந்த காலம் மலையேறிவிட்டது. அவர் இனிமேல் போட்டிகளை பினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்க கூடாது . பிராவோவிற்கு வயதும் ஆகிவிட்டது .

டெத் ஓவர்
இதனால் டெத் ஓவர்களில் அவர் சரியாக பந்து வீச மாட்டார். எனவே சிஎஸ்கே அணி டெத் ஓவர்களில் பவுலிங் செய்ய வேறு வீரர்களை எடுக்க வேண்டும். லுங்கி நிகிடி போன்ற வீரர்களை டெத் ஓவர் வீச தோனி பயன்படுத்த வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











